Tuesday, September 05, 2006

அன்பே!
மனித வாழ்வின் காலகட்டதை பல பகுதிகளாக பிரிக்களாம். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வின் லட்சியங்களாக, கனவாக ஒரு பட்டியலெ வைத்கிருக்கிறான். அதில் அவன் அனைத்தையும் அடைவதில்லை.அவன் சந்திக்கும் சவால்கள் ஏராளம். இத்தனையும் சந்தித்து அவன் ஜெய்ப்பது வியப்பு.பல லட்சியங்களில் ஒன்று அடையமுடியவில்லை என்றாலும் மனம் சோர்ந்து விடுகிறான். அவன் அடைந்த கனவுகள், ஜெய்த்த சவால்கள் பற்றி மகிழ்ச்சி கொள்ளாமல் துன்புறுகிறான். அதனால் பிற்கால கனவுகளும் பாதிக்கபட நேர்கிறது.



ஆங்கிலத்தில் "தி ஆர்ட் ஆப் லெட்டிங் கோ" என்கிற சொற்றொடர் உண்டு. சென்றதை பற்றி கவலைக்கொள்ளாமல் வாழ்கை பயணத்தை தன்னம்பிக்கையோடு தொடர வேண்டும். இது போதனையாக கருதாமல் நண்பனின் வேண்டுகோளாக கொள்ள வேண்டும். இவன் என்ன பெரிய மேதாவியா?அறிவுரை சொல்கிறான் என்று எண்ணாதீர்கள். இது என் சொந்த அனுபவத்தில் கண்ட உண்மை. போராடி கொண்டிருக்கிறேன். இறுதி வரை போராடுவேன். உங்கள் வாழ்வின் கனவுகள் மெய்ப்பட, வெற்றியடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

1 comment:

Shanthi Krishnakumar said...

Nice one and continue ytour good work. Visit my blog too.http://shanthisthaligai.blogspot.com/