Saturday, September 04, 2010

ஹரே கிருஷ்ணா !




இது வரை எனக்கு கிடைக்காத ஆனந்தம். மனது லேசாக இருப்பதுபோல உணர்ந்தேன். கிருஷ்ண ஜெயந்தி !!! இந்தியாவில் இருக்கும் போதாவுது பரவாயில்லை. வீட்டில் அனைவரும் சேர்ந்து நன்றாக கொண்டாடுவோம். ஆனால் ஆஸ்திரேலியா வில் செட்டில் ஆன பின் அப்படி ஒரு நாளை நான் வெகு விரைவில் மறந்தேன். ஓர்குட்டில் யாராவுது எனக்கு வாழ்த்து சொன்னால் மட்டுமே எனக்கு அந்நாள் நினைவுக்கு வந்தது. ஆனால் சிட்னியில் உள்ள ராதா கிருஷ்ண கோவிலில் நடந்த ஜன்மாஷ்டமி விழாவில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் அமைந்தது. இரவு ஒரு மணிவரை நிகழச்சி தொடர்ந்தது. ஆயிரத்திற்கு மேலான பக்தர்கள் ஊரில் திரளுவதை பார்த்த நான் இங்கு திரண்ட மூவாயிரம் பக்தர் கூட்டத்தை நான் எதிர் பார்க்கவில்லை என்றே சொல்லலாம்.

இதில் வேடிக்கை என்னவென்றால் வந்ததில் முக்கால்வாசி மக்கள் ஆஸ்திரேலியர்கள். அவர்களின் மாமூலான உடை எல்லாம் மாற்றி வேட்டி சேலையில் பார்த்ததும் ஆச்சர்யத்தில் வியந்தேன். நாம் என்னவோ மேல்நாட்டு கலாச்சாரத்தை நோக்கி போய் கொண்டு இருக்கிறோம், ஆனால் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நமது கலாச்சாரத்தை நோக்கி போவதை இங்கு பார்க்க நேர்ந்தது . அவர்களே தங்களின் வாழ்க்கை முறையை மாற்றி , உணவு பழக்கங்களை மாற்றி கிருஷ்ணனை வழிபடும் போது கிருஷ்ணர் பிறந்த நாட்டில் பிறந்தும் நம்மால் அவரை உணர முடியவில்லை என்று நினைக்க வியப்பாகவும் வருத்தமாகவும் உள்ளது.

அன்று என்னால் ஒரு நல்ல முடிவை எடுக்க முடிந்தது. இனிமேல் என் வழி கிருஷ்ணர் விட்ட வழி.


Monday, September 11, 2006

எதோ எழுத போய் என்னவோ எழுதிடேனு சில விமர்சனங்கள். இதுக்காக எழுதரத விடுவேன்னு மட்டும் தப்பு கணக்கு போட்டுராதீங்க.யாரயும் விடுரதா இல்ல. எனக்கு முன்னொடிகள் சில ஜாம்பவான்கள் இந்த வலைப்பதிவுல பின்னராங்க. சிறிது காலம் அவர்களின் நடையை பிரமிப்போடு பார்த்துட்டு இருக்கேன்.ஆதலால் இப்போதைக்கு உங்களை உயிரோடு விடறேன். விரைவில் சந்திபோம்

Tuesday, September 05, 2006

அன்பே!
மனித வாழ்வின் காலகட்டதை பல பகுதிகளாக பிரிக்களாம். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வின் லட்சியங்களாக, கனவாக ஒரு பட்டியலெ வைத்கிருக்கிறான். அதில் அவன் அனைத்தையும் அடைவதில்லை.அவன் சந்திக்கும் சவால்கள் ஏராளம். இத்தனையும் சந்தித்து அவன் ஜெய்ப்பது வியப்பு.பல லட்சியங்களில் ஒன்று அடையமுடியவில்லை என்றாலும் மனம் சோர்ந்து விடுகிறான். அவன் அடைந்த கனவுகள், ஜெய்த்த சவால்கள் பற்றி மகிழ்ச்சி கொள்ளாமல் துன்புறுகிறான். அதனால் பிற்கால கனவுகளும் பாதிக்கபட நேர்கிறது.



ஆங்கிலத்தில் "தி ஆர்ட் ஆப் லெட்டிங் கோ" என்கிற சொற்றொடர் உண்டு. சென்றதை பற்றி கவலைக்கொள்ளாமல் வாழ்கை பயணத்தை தன்னம்பிக்கையோடு தொடர வேண்டும். இது போதனையாக கருதாமல் நண்பனின் வேண்டுகோளாக கொள்ள வேண்டும். இவன் என்ன பெரிய மேதாவியா?அறிவுரை சொல்கிறான் என்று எண்ணாதீர்கள். இது என் சொந்த அனுபவத்தில் கண்ட உண்மை. போராடி கொண்டிருக்கிறேன். இறுதி வரை போராடுவேன். உங்கள் வாழ்வின் கனவுகள் மெய்ப்பட, வெற்றியடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Monday, September 04, 2006

வண்ணச்சிறகுகள்

அனைவருக்கும் வணக்கம்,
தமிழ் வலைபதிவு ஒன்றை ஆரம்பிக்க பல நாள் திட்டமிட்டு இன்று தான் வழி உதித்தது.இதற்கு பெரிதும் காரணமாயிருந்தவர் எனது நண்பர் "திரு" திருமுருகன் அவர்கள். "வண்ணச்சிறகுகள்" என்கிற இப்பதிவு ஒரு பொழுது போக்குக்கான அனைத்து அம்சமும் அடங்கியிருக்கும். எனது சொற்றொடரில், இலக்கணத்தில் பிழையிருந்தால் மன்னித்து சுட்டிக்காட்டும்படி கேட்டுக்கொள்கிறேன்.இப்படிக்கு உங்கள் நண்பன் --வத்சா

தமிழ் வாழ்க!!!!!!