Saturday, September 04, 2010

ஹரே கிருஷ்ணா !




இது வரை எனக்கு கிடைக்காத ஆனந்தம். மனது லேசாக இருப்பதுபோல உணர்ந்தேன். கிருஷ்ண ஜெயந்தி !!! இந்தியாவில் இருக்கும் போதாவுது பரவாயில்லை. வீட்டில் அனைவரும் சேர்ந்து நன்றாக கொண்டாடுவோம். ஆனால் ஆஸ்திரேலியா வில் செட்டில் ஆன பின் அப்படி ஒரு நாளை நான் வெகு விரைவில் மறந்தேன். ஓர்குட்டில் யாராவுது எனக்கு வாழ்த்து சொன்னால் மட்டுமே எனக்கு அந்நாள் நினைவுக்கு வந்தது. ஆனால் சிட்னியில் உள்ள ராதா கிருஷ்ண கோவிலில் நடந்த ஜன்மாஷ்டமி விழாவில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் அமைந்தது. இரவு ஒரு மணிவரை நிகழச்சி தொடர்ந்தது. ஆயிரத்திற்கு மேலான பக்தர்கள் ஊரில் திரளுவதை பார்த்த நான் இங்கு திரண்ட மூவாயிரம் பக்தர் கூட்டத்தை நான் எதிர் பார்க்கவில்லை என்றே சொல்லலாம்.

இதில் வேடிக்கை என்னவென்றால் வந்ததில் முக்கால்வாசி மக்கள் ஆஸ்திரேலியர்கள். அவர்களின் மாமூலான உடை எல்லாம் மாற்றி வேட்டி சேலையில் பார்த்ததும் ஆச்சர்யத்தில் வியந்தேன். நாம் என்னவோ மேல்நாட்டு கலாச்சாரத்தை நோக்கி போய் கொண்டு இருக்கிறோம், ஆனால் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நமது கலாச்சாரத்தை நோக்கி போவதை இங்கு பார்க்க நேர்ந்தது . அவர்களே தங்களின் வாழ்க்கை முறையை மாற்றி , உணவு பழக்கங்களை மாற்றி கிருஷ்ணனை வழிபடும் போது கிருஷ்ணர் பிறந்த நாட்டில் பிறந்தும் நம்மால் அவரை உணர முடியவில்லை என்று நினைக்க வியப்பாகவும் வருத்தமாகவும் உள்ளது.

அன்று என்னால் ஒரு நல்ல முடிவை எடுக்க முடிந்தது. இனிமேல் என் வழி கிருஷ்ணர் விட்ட வழி.